நாமக்கல்: சாமியாத்தாள் (67) என்ற மூதாட்டி வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு கழுத்து மற்றும் வாயில் வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மூதாட்டியின் உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நகை, பணத்துக்காக கொலை செய்ததாக ஆனந்த்ராஜ் என்பவரும் அவர் நண்பரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.