வீரனார் குளத்தைச் சுற்றி வேலி அமைக்கப்படுமா என எதிர்பார்ப்பு

58பார்த்தது
வீரனார் குளத்தைச் சுற்றி வேலி அமைக்கப்படுமா என எதிர்பார்ப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி வரதராஜபுரத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வீரனார் குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குளத்தின் அருகில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் கரையை விட சிமெண்ட் சாலை உயரமாக இருப்பதால் சாலையில் செல்பவர்கள் சாலையில் இருந்து குளத்தில் தவறி விழும் அபாய நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் இருப்பதால் குளத்தில் தவறி விழுந்து விபத்துக்கள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் அப்பகுதி பொதுமக்கள் இருந்து வருகின்றனர். 

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு வீரனார் குளத்தைச் சுற்றி வேலி அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி