வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா

67பார்த்தது
வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வர் கோயிலில் மாசி மகப்
திரு விழாவையொட்டி கல்யாணசுந்தரர் எழுந்தருளிய தெப்பத்திருவிழா நடைபெற்றது.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நடைபெற்றது.
திருக்கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி அம்மனுடன் கல்யாணசுந்தரர் எழுந்தருளிய தெப்பத் திருவிழா சென்டை மேளம், நாதஸ்வரம் ஆகிய மங்கள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது.
வேதாரண்யம் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தெப்ப திருவிழாவை காண சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்த கோடி பெருமக்கள் ஆயிரக்கணக்கில்
பங்கேற்று தெப்பத்திருவிழாவை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி