நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ள பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர், இதில் காயம் அடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தனது சொந்த நிதியிலிருந்து காயம் அடைந்த மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கினார்.