இந்திய ராணுவத்தினர் நலன் வேண்டி கோயிலில் சிறப்பு பூஜை

52பார்த்தது
இந்திய ராணுவத்தினர் நலன் வேண்டி கோடியக்கரை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மாரியம்மன் ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு கும்ப யாக பூஜை நடைபெற்று விநாயகருக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய ராணுவம் வெற்றி பெறவும், எல்லையில் பதட்டம் தணியவும் இந்திய ராணுவத்தினர் நலமுடன் இருக்கவும் வேண்டி சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. வழிபாட்டில் ஆலய நிர்வாகி பாலசுப்பிரமணியன் , விழாக்குழு செயலாளர் அனந்தராமன் மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி