நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா செட்டிபுலம் கிராமத்தில் அருள்மிகு மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக மழை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் திறத்தேரில் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.