நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா வாய்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தானிக்கோட்டகம், அண்ணா பேட்டை, துளசியாப்பட்டினம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கோடை மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரம் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.