மயிலாடுதுறை: பாஜக புதிய நிா்வாகிகள் தோ்வு

67பார்த்தது
மயிலாடுதுறை: பாஜக புதிய நிா்வாகிகள் தோ்வு
மயிலாடுதுறையில் பாஜக மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் ஜி. வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் மோடி. கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில் பாலு, மாவட்ட செயலாளர் கோமல் எஸ். ஆர். வினோத் முன்னிலை வகித்தனர். 

இதில், தேர்தல் மேலிட பார்வையாளர் பேட்டை. சிவா, மாவட்ட பார்வையாளர் பி. எல். அண்ணாமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை அறிவித்தனர். இதில், மயிலாடுதுறை நகர தலைவராக ராஜகோபால், தெற்கு ஒன்றிய தலைவராக ஈழவேந்தன், மணல்மேடு வடக்கு ஒன்றிய தலைவராக நடராஜ், குத்தாலம் கிழக்கு ஒன்றிய தலைவராக சிவா, மேற்கு ஒன்றிய தலைவராக சுரேஷ்குமார், செம்பனார்கோவில் மத்திய மண்டல தலைவராக அஜித்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் ஸ்ரீதா, தேர்தல் பொறுப்பாளர்கள் ராஜ்மோகன், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி