மயிலாடுதுறை: புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தொடக்கம்

64பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் ஊராட்சியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணியினை தமிழ்நாடு மின்சாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் பழைய மின்கம்பங்கள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதனை அடுத்து அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய மின்கம்பங்கள் நடும் பணி தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி