மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு, வெள்ளான்தெரு, வரதாச்சாரியார் தெரு, பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீரில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறையில் பல இடங்களில் அவ்வப்போது பாதாள சாக்கடை பொங்கி சாலையில் வழிவதாலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.