கால்நடை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா

54பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 90 லட்சத்தில் நேற்று பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு செயற்பொறியாளர், கால்நடை மருத்துவமனை மருத்துவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்தனர். விரைவில் இந்த மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி