பிரபல திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி சன்னதிக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது பக்தி பாடலை மனம் உருக பாடி மெய்மறந்து வழிபட்டார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வழங்கினர்.
கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் பாடகர் வேல்முருகனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.