நாகை எட்டுக்குடியில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வசந்த நடனம் முருகனின் ஆதிபடைவீடு என அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில் 5ஆம் நாளான இன்று வசந்த உற்சவம் நடைபெற்றது. வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனைக்குப் பின்னர் உட்பிரகாரத்தில் தியாகராஜர் வசந்த நடனம் ஆடுவதுபோல் தியாகராஜர் போல் சுப்பிரமணியருக்கு அலங்கரிக்கப்பட்டு நடனமாடி வசந்த உற்சவ சுவாமி வீதியுலா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தென்னை ஓலையில் வாழை இலை போட்டு சர்க்கரை பொங்கல் பல்லையம் வைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 11ஆம் தேதியும், 60 மணி நேரம் இடைவிடாது பாலபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.