மயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

684பார்த்தது
மயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெடுந்தூர ஓட்டப்போட்டியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ராமலிங்கம் எம். பி. , ராஜகுமார் எம். எல். ஏ. , ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டி 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி. மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி. மீ. தூரமும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி. மீ. தூரம், பெண்களுக்கு 5 கி. மீ. தூரம் என 2 பிரிவின் கீழ் நடந்தது. போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் பொது மக்கள் என சுமார் 220 பேர் பங்கேற்றனர். நெடுந்தூர ஒட்டப்போட்டியானது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி சாய் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ. ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you