மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கடைவாசல் பகுதியில் இயங்கி வரும் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சம்பா சாகுபடிக்கான கொள்முதல் பணி நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்ததற்கான தொகையும் உடனடியாக வரவு வைக்கப்படுகிறது.