மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் சாலைகளில் குதிரைகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் குதிரைகள் அதன் குட்டிகளுடன் சாலை ஓரத்தில் அதிகமாக சுற்றி திரிவதால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே குதிரைகளை முறையாக அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.