ஸ்ரீ கோமளவள்ளி அம்மன் கோவிலில் மாசி மாத உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள், பறவை காவடி, அலகு காவடிகள் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோமளவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.