சீா்காழி அருகே கொலை முயற்சி வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவரை 3 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசாா் கைது செய்தனா்.
கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்தைச் சேர்ந்தவா் வெங்கட்ராமன் (35). இவா், அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ் என்பவரைத் தாக்கியது தொடா்பாக கொள்ளிடம் ஆணையா் சத்திரம் போலீசாா் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வெங்கட்ராமன் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து பெங்களூரு விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை வந்து இறங்கிய வெங்கட்ராமனை ஆணையா் சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீசாா் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பின்னா் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.