மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் ரூ. 12.67 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உணவு தானியக் கிடங்கு திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி தலைமை வகித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் புதிய உணவு தானியக் கிடங்கை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப் பொருள்களை வழங்கினார். இதில், கூடுதல் ஆட்சியர் முகம்மது ஷபீர் ஆலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.