மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் தர்மபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இந்த பேரணியானது நடைபெற்றது. இந்த பேரணி இணை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் இதில் கல்லூரியில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.