மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக கழகம் சார்பாக பூத் கமிட்டி அமைக்கும் பணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குத்தாலம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
இதில் குத்தாலம் தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளராக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் நகர கழக செயலாளர் நாஞ்சில் கார்த்தி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.