அடிபிரதட்சணம் செய்து ஆதீனம் வழிபாடு

84பார்த்தது
அடிபிரதட்சணம் செய்து ஆதீனம் வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் பரிகார ஸ்தலமான ஸ்ரீ தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவிலில் அடி பிரதட்சணம் செய்து வழிபாடு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி