பழையாறு பக்கிங்காம் கால்வாயில் 6 புதிய கதவணைகள்

185பார்த்தது
பழையாறு பக்கிங்காம் கால்வாயில் 6 புதிய கதவணைகள்
கொள்ளிடம் அருகே பழையாறு, புதுப்பட்டினம், தற்காஸ், கலைஞர் நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய கிராம பகுதிகளை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கடல்நீர் அதிக அளவில் புகும்போது பழையாறு சுனாமி நகர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதோடு, ஆயிரத்துகும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களிலும் உப்பு நீர் புகுந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளானது. தற்போது பக்கிங்காம் கால்வாயில் 6 இடங்களில் கதவணை அமைத்துள்ளதால் எங்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட செயற்பொறியாளர், சீர்காழி உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி இப்பகுதி மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும் கதவணை அமைக்கப்பட்டுள்ள பக்கிங்காம் கால்வாய் கரையில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு கதவணையை உரிய நேரங்களில் சென்று மூடி திறக்கவும், பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் எளிதில் சென்று வரும் வகையில் தார்ச்சாலை அமைக்கத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி