தரங்கம்பாடி: கடலோர காவல்துறை சார்பில் எச்சரிக்கை

7பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை என்பது வரலாற்றுச் சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதியாக உள்ளது.இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதனை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடலில் குளிக்க வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி