சனி பிரதோஷத்தில் யுத்தம் முடிவுக்கு வர சிறப்பு யாக பூஜை

85பார்த்தது
கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சனி பிரதோஷத்தில் இந்திய எல்லையில் நடைபெறும் யுத்தம் முடிவுக்கு வர சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கும் மூலவருக்கும் மஞ்சள், திரவியம், பால் , தயிர், எண்ணை, சந்தனம் , இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக , இந்திய எல்லையில் பாகிஸ்தான் உடன் நடைபெறும் யுத்தம் முடிவுக்கு வர வேண்டுமென சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பூஜையில் கோடிக்கரை கோடியக்காடு ஊராட்சிகளை சேர்ந்த பிரதோஷ வழிபாட்டு குழுவினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி