மயிலாடுதுறை அடுத்த சீனிவாசபுரத்தில் இருந்து அக்களூர் செல்லும் பாதையில் ஒரு சிலர் வேலை வைத்து அடைத்து விட்டனர். இதன் காரணமாக மற்றொரு பிரிவை சேர்ந்த 70 குடும்பத்தினர் தங்கள் வீடுகளுக்கு சுற்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை கண்டித்து மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையான சீனிவாசபுரம் பகுதியில் இரவு நேரத்தில் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.