மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பொறையார் அருகே தில்லையாடியில் உள்ள மகிமலை ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து நீர் போக்குவரத்து தடை பட்டுள்ளது.
இதனால் தில்லையாடி, பொறையார் மற்றும் ஒழுகை மங்கலம் கடைமடை பகுதிகளில் நெல் விதைத்துள்ள விவசாயிகள் சாகுபடிக்கு போதிய தண்ணீர் வந்து சேராமல் அவதிப்படுகின்றனர்.
எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.