மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலையை சேர்ந்த முருகமங்கலம் கிராமத்தில் மின்கம்பம் ஒன்று பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. எனவே இதனை அப்புறப்படுத்திவிட்டு புதிய மின்கம்பம் அந்த இடத்தில் நடப்படுவதற்காக மின்சார வாரியத்தினால் பள்ளம் தோண்டப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால் இதனை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.