மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாத்தங்குடி கிராமத்தில் உள்ள தூய தெரசா கலைக்கல்லூரியின் அருகில் கருவேல மரத்தின் இலைகள் விழுந்து பாசி பிடித்த குளம் உள்ளது. இதில் நீட்டிப்பு தொட்டியில் இருந்து உபரி நீர் வந்து விழுகிறது. இந்த குளத்தில் அருகில் உள்ள கிராம மக்கள் இந்த குளத்தில் குளிப்பதால் அவர்களுக்கு தோல் வியாதிகள் வந்துள்ளது. எனவே கருவேல மரத்தை அகற்றி குளத்தை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.