தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

79பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் மக்களுக்கு மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும் போது கடல் நீர் ஊருக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

எனவே இந்த பகுதியில் தடுப்பு சுவர் அல்லது கருங்கல் கொட்டி தடுப்பு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி