திமுக இளைஞரணி சார்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டதற்கு திமுக தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருத்து தலைமை தாங்கினார். இதில் மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.