மயிலாடுதுறை காவிரி நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளி சிபிஎஸ்சி பள்ளி எனக் கூறி பல ஆண்டுகளாக ஏமாற்றி பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக கோரி பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.