மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது மணல்மேடு அருகில் வரிச்சுகுடியைச் சேர்ந்த அறிவழகன் மகன் திலீப் என்பவர் திலீப் குமார் ஆத்தூரை சேர்ந்த மாணிக்கத்திற்கு 624 மது பாட்டில்களை இரண்டு சக்கர வாகனத்தில் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மதுவிலக்கு காவல்துறையினர் மணல்மேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மது பாட்டில்கள் கடத்தி வந்த திலீப் குமாரை கைது செய்து மது பாட்டில்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தி வரப்பட்ட மதுபானங்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.