ஒருபடி நெல்லை கூலியாக உயர்த்தி கேட்டதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தற்போதைய நாகை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தலித் சமூகத்தினர் ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.
உலகையே உலுக்கிய இந்த கோரப்படுகொலை சம்பவத்தின் 56 ஆம் ஆண்டு நினைவு தினம் வெண்மணி கிராமத்தில் அமைந்துள்ள வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் இன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன், நாகை எம்பி வை. செல்வராஜ், நாகை. மாலி ஆகியோர் வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.