மயிலாடுதுறையில் 11 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் ஆறு வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரம் பணி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்பியன் வேலங்குடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவங்கியது.
இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் பங்கேற்று பணிகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.