மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் குளத்தில் பட்ட பகலில் ஜேசிபி வைத்து மணல் திருட்டு நடைபெறுவதை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.