திட்டச்சேரி காவல் சரகத்தில் வாகனச் சோதனை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி காவல் சரகத்திற்குட்பட்ட கடைவீதி, பேருந்து நிலையம், சோதனை சாவடி, சீயாத்தமங்கை பிரதான ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாகை மாவட்ட எஸ். பி. அருண் கபிலன் உத்தரவின் பேரில் திட்டச்சேரி போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனா்.
வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்துள்ளனரா, வாகன உரிமம், வாகனத்திற்குரிய புத்தகம், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனா். மேலும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சோதனையில், திட்டச்சேரி உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.