நாகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் பேரணியாக சென்று அஞ்சலி: நாகை நாடாளுமன்ற உறுப்பினர், மீன் வளர்ச்சி கழக தலைவர் பங்கேற்று புகழஞ்சலி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான முன்னாள் பிரதமா் டாக்டர். மன்மோகன் சிங் மறைவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் தொடங்கிய மௌன அஞ்சலி பேரணி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரிதிடலில் நிறைவு பெற்றது. இதில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவுரித்திடலில் இன்று டிசம்பர் 28 சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற மௌன அஞ்சலி நிகழ்ச்சியில் காங்கிரஸ் திமுக மனிதநேய மக்கள் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மன்மோகன் சிங்குக்கு புகழஞ்சலி செலுத்தினர்.