நாகை: 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

69பார்த்தது
நாகை: 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இது, தமிழகம் நோக்கி நகா்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் டிச. 26-ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மீனவா்களுக்கும், மீனவ கிராம மக்களுக்கும் காற்றின் வேகம் குறித்து எச்சரிக்கும் வகையில், நாகை துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி