நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுபவர்களை தடுக்கும் வகையில் சாகர் கவஜ் ஆபரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஆற்காட்டு துறை கடலோர பகுதியில் வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி சுந்தர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வரலட்சுமி உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு போலீசார் படகுமூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.