நாகை: மழை காரணமாக உளுந்து, பருத்தி வகைகள் பாதிப்பு

74பார்த்தது
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக உளுந்து, பச்சைப்பயிறு, பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. சம்பா அறுவடை நடைபெறும் போதே உளுந்து, பயிறு வகைகளை ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை உளுந்து, பயிறு பயிரிடும் பணிகள் நடைபெறும். 

இது 60 முதல் 70 நாள் பயிர் என்பதால், மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை உளுந்து, பயிறு அறுவடைப் பணிகள் முடிந்துவிடுவது வழக்கம். தற்போது திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறும் 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் 2 நாள்கள் மழை பெய்து வருகிறது. 

உளுந்து, பயிறு தற்போது ஒன்றியம் முழுவதும் பூக்கும், காய்க்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் திடீர் கனமழை காரணமாக சில இடங்களில் பயிர் வகைகள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. 

திருமருகல், குத்தாலம், எரவாஞ்சேரி, கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டான்தோப்பு, திருக்கண்ணபுரம், பில்லாளி, வடகரை, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உளுந்து, பச்சைப் பயிறு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆலத்தூர், ஏர்வாடி, சேஷமூலை, அம்பல், பொறக்குடி, வாழ்குடி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிர் சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி