தமிழக முழுவதும் 2024-25-ம் ஆண்டுக்கான பிளஸ் - 2 தேர்வு முடிவுகள் இன்று மே 8 வியாழக்கிழமை காலை வெளியானது. நாகை மாவட்டத்தில் 2965 மாணவர்களும், 3529 மாணவிகளும் என மொத்தம் 6494 பேர் இந்த தேர்வை எழுதினர்.
இதில் 2813 மாணவர்களும், 3423 மாணவிகளும் என 6236 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 94. 87 சதவீதமும், பெண்கள் 97 சதவீதமும் என 96. 3 சதவீதம் தேர்ச்சி விகிதமாகும்.
கடந்த 2023-24 ஆண்டை விட 4. 94 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகமாகும். இதனால் மாநிலம் முழுவதிலும் 37-வது இடத்தில் இருந்த நாகை மாவட்டம் 11 - வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒரே ஆண்டில் 26 இடங்கள் முன்னேறி, நாகை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது