நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள கோடியக்கரை வனசரகம் 27 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது. தற்பொழுது அந்த வழியாக செல்லும் போது மான், குதிரை மற்றும் குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் சுற்றி தெரிவதால் அப்பகுதியில் பயணிக்கும் கோடியக்காடு மற்றும் கோடியக்கரை வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த அச்சத்துடனே செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் குரங்குகள் தாங்கள் வாங்கி வரும் பொருட்களை பறித்து செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.