திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது

64பார்த்தது
திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஏனங்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (வயது 44) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி