நாகப்பட்டினம்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பெண்கள், சிறுவா்கள் பேரணி

64பார்த்தது
நாகப்பட்டினம்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பெண்கள், சிறுவா்கள் பேரணி
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த சிறுவர்கள், பெண்கள் வாழ்த்துப் பாடல்கள் பாடி பேரணியாக வந்தனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை (டிச. 25) பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாடுகளுடன் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, வேளாங்கண்ணி பங்கின் ஒருங்கிணைந்த அன்பியங்களின் சார்பில், கிறிஸ்துமஸ் விழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய விண்மீன் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுவர்கள், யாத்ரீகர்கள், கிறிஸ்துமஸ் தொப்பி அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். இறுதியாக பேராலயத்தை சுற்றி, மேல் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஊர்வலத்தின் போது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த பலரும் இசைக்கேற்ப நடனமாடியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய செய்தி