நாகப்பட்டினம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில், எதிர் வரும் 10. 06. 2024 அன்று பிற்பகல் சுமார் 4. 30 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதனால் இம்மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் (புயள ஊலடiனெநச) பதிவு செய்து வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும், எரிவாயு உருளைகள் நுகர்வோருக்கு சீரான முறையில் வழங்குதல் தொடர்பான ஆலோசனைகளையும் அனைத்து எரிவாயு நுகர்வோர் அமைப்பினர் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொது மக்கள் குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.