நாகையை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா (வயது 34) போட்டோகிராபர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இவருக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. ராகேஷ் சர்மா, மகள், தாய் என 3 பேர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராகேஷ் சர்மா மகள் என்றும் பாராமல் தனது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது உறவுக்கார பெண் ஒருவர் நாகை குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து குழந்தை பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ராகேஷ் சர்மா தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து குழந்தை பாதுகாப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இது தொடர்பான வழக்கு நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா தீர்ப்பு வழங்கினார்.
அதில், மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு தொல்லை (தாக்குதல்) கொடுத்த குற்றத்துக்காக ராகேஷ் சர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நாகை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.