குழந்தைகள் மட்டுமே பங்கேற்ற சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சி

77பார்த்தது
நாகை அடுத்த நாகூரில் குழந்தைகள் மட்டுமே பங்கேற்ற சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சி அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது

பொதுவாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை அரசியல் கட்சியினரும் சமூக அமைப்புகளும் ஏற்பாடு செய்வார்கள். அதற்கு மாறாக நாகூரில் நடந்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்ற சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சி அனைவரின் வரவேற்பையும் பெற்றது. சிறுவயதிலிருந்தே சமத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் நாகூர் ஷாகே மதினா மதரஸா சார்பில் குழந்தைகளுக்கான சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாகூரில் நடைபெற்றது. யூசுஃப் நைனா தெரு, அம்பேத்கர் நகர், பீரோடும் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஒரு வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இஸ்லாமிய குழந்தைகளோடு அருகருகே அமர்ந்து பிற மத குழந்தைகளும் மத பேதமின்றி நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழந்தைகளை கவரும் வகையில் நூடுல்ஸ், பேரிச்சை, பர்கர், ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், பாதாம் ஜூஸ் விருந்தில் இடம் பெற்றிருந்ததால் மகிழ்ச்சியோடு உணவருந்தி குழந்தைகள் மகிழ்ந்தனர். நாகூரில் ஒரே இடத்தில் குழந்தைகளை மட்டுமே திரட்டி நடைபெற்ற சமத்துவ இப்தார் நிகழ்ச்சி அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி