நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகமும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை தேசிய பசுமைப் படையும், பள்ளிக்கல்வி துறையும், அமிர்தா வித்யாலயா பள்ளியும் இணைந்து, சுற்று சூழல் தினத்தை ஒட்டி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, அமிர்தா பள்ளி வரை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர், வ. ப. வணந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கே சின்னையன் சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். உலகளாவிய பிளாஸ்டிக் பயன்பாட்டினை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற இவ்வருட ஐநா சபையின் குறிக்கோளின் படி மாணவர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். பேரணியில் சமூக ஆர்வலர் மீரா சரஸ்வதி, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், தேசிய பசுமைப்படை ஆசிரியை மங்கலம், மாவட்ட ஆட்சியரக பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.