நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டார செயலாளர் சுகுமாறன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் கலைஞர் கனவு இல்ல திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்க திட்டங்களுக்கு போதுமான ஊழியர்கள் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும், கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளர்கள் பட்டியல் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்க பயனாளர்கள் பட்டியலை இறுதி படுத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் மீனா நன்றி கூறினார்.